Skip to content
Home » ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

  • by Senthil

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே  இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த இலங்கை கடற்படை  ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் கைது செய்தது.  அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை  மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றது. எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை அத்துமீறி இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

இலங்கை படையின் அட்டகாசம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையிலும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மத்திய அரசு ஒரு கண்டனம் தெரிவித்தால் இலங்கை தன்னை திருத்திக்கொள்ளும். அதைக்கூட மத்திய அரசு செய்ய மறுக்கிறது என தமிழக மீனவர்கள் மத்திய அரசின் மீது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!