இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தனாகுன் மாவட்டத்தில் இன்று காலை ஒரு பஸ் மர்ஸியாங்டி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த பஸ்சில் பயணித்த 40 பயணிகளும் பலியானார்கள். விபத்துக்குள்ளான பஸ் பொகாராவில் இருந்து தலைநகர் காட்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்தது. இறந்தவர்கள் அனைவரும் இந்தியர்கள் என கூறப்படுகிறது.