Skip to content
Home » நெல்லை…….தாமிரபரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

நெல்லை…….தாமிரபரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

  • by Senthil

நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்த  காரையாரில் சொரிமுத்து அய்யார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.  சிவகாசியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று கோவிலுக்கு வந்தனர்.  மேனகா(18)  அவரது தங்கை ஈஸ்வரி ஆகியோர்  அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் மூழ்கினர். இதைப்பார்த்த மேனகாவின் சித்தப்பா  சங்கரேஸ்வரன்(40),  மணீஸ்வரன் ஆகியோர் ஆற்றில் பாய்ந்து  சகோதரிகளை மீட்க முயன்றனர். அப்போது   இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மணீஸ்வரனை மட்டும் மீட்டனர்.  சங்கரேஸ்வரனும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தினர். தீயணைப்பு படை வீரர்கள் வந்து உடலை தேடி மீட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!