Skip to content

சீர்காழி அருகே லாரி மோதி போலீஸ்காரர் பலி…

  • by Authour

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (35 ),இவர் மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்கு தடுப்பு பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மயிலாடுதுறையில் பணி முடிந்து இரவு சிதம்பரத்தில் உள்ள வீட்டிற்கு காளிதாஸ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஆனந்த கூத்தன் என்ற இடத்தில் நான்கு வழிச்சாலையில் சென்ற போது சிதம்பரத்திலிருந்து சீர்காழி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த காளிதாசன் மீது நேருக்கு நேர்மோதி
சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி காளிதாஸ் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளிதாசன் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனர்

காட்டுமன்னார்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரை கைது செய்தனர் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். உயிரிழந்த காளிதாசுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. சீர்காழி புறவழிச்சாலையில் போதிய முன்னறிவிப்பு பலகை இல்லாமல் பணிகளை செய்வதால் சாலை விபத்துகள் தொடர்வதாகவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சீர்காழி பகுதியில் லாரி மோதி காவலர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!