தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 22 வயது பட்டதாரி பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தெற்கு கோட்டை பகுதியை சேர்ந்த கவிதாசன் (25), என்பவரை காதலித்து வந்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்த இளம்பெண்ணை, காதலன் தனியாக சந்திக்க வேண்டும் என தூதுவிட்டார். காதலனை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் அந்த பெண்ணும் ஆள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு, தனியாக சென்றார். அப்போது அங்கு இருந்த காதலன் கவிதாசன் மற்றும் அவரது நண்பர்கள் பாப்பாநாடு பகுதியை சேர்ந்த திவாகர் (27), பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இவர்களில் ஒருவன் பலாத்காரம் செய்ததை செல்போனிலும் வீடியோவாக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாசன், திவாகர்,பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.