Skip to content
Home » ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. இந்தியாவுக்கு 3வது பதக்கம்

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. இந்தியாவுக்கு 3வது பதக்கம்

  • by Senthil

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் 177 பேர் கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.  இதுவரை 2  வெண்கல பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.  இரண்டும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தான் கிடைத்தது.  பானுபாக்கர் தனி நபர் பிரிவிலும்,  இன்னொரு முறை மனுபாக்கர்  சரப்ஜோத் சிங் இணையுடனும் சேர்ந்து  வெண்கலம் வென்றார்.

இந்த நிலையில் இன்று  நடந்த 50 மீட்டர்  3p  பிரிவு துப்பாக்கி சுடுதலில் இந்திய  வீரர் ஸ்வப்னில் குசால் 451.4 புள்ளிகள் பெற்று  வெண்கலம் வென்றார். இதையும் சேர்த்து இந்தியாவுக்கு இந்த ஒலிம்பிக்கில் 3 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. மூன்றும் துப்பாக்கி சுடுதல் பிரிவிலேயே கிடைத்துள்ளது.  28 வயதான ஸ்வப்னில் மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!