பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் 7 மாத கர்ப்பிணி ஒருவரும் பங்கேற்றுள்ளார். ஆச்சரியமான செய்தி தான். ஆனால் அது தான் உண்மை. எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை நடா ஹபீஸ் 7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்.
களத்தில் இருந்தது 2 பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்னை, மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை என இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டு கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.
நடா ஹபீஸ் மருத்துவ பட்டதாரி. 3வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்று உள்ளார்.