Skip to content

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு… அரியலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…

அரியலூர், அண்ணா சிலை அருகில், திமுக கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைப்படியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட திமுக சார்பில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த “பாசிச பாஜக அரசை கண்டித்து

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக துணை செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கழக கொள்கைபரப்பு இணைச்செயலாளர் முனைவர் இரா.தி.சபாபதி மோகன், கழக சட்டதிட்ட திருத்தக்ககுழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், கொள்கைபரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தலைமைகழக நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!