Skip to content

கரூரில் 78 வயது மூதாட்டிக்கு ஜீவனாம்ச தொகை தர மறுக்கும் மகன் மீது புகார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் இன்று கடவூர் அருகே அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியைச் சேர்ந்த மாரம்மாள் வயது 78 என்ற மூதாட்டி புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் நீதிமன்றம் உத்தரவிட்ட ஜீவனாம்ச வழக்கு முடிந்த பிறகும், மாதம்தோறும் வழங்க வேண்டிய 1000 ரூபாய் பணம் செலுத்தாமல் தனது மூத்த மகன் அலைக்கழிப்பு செய்வதாக கூறினார்.

தன்னால் சரிவர நடக்க முடியவில்லை. கண் பார்வை மற்றும் உடல் நல கோளாறுகள் இருப்பதால் இரண்டு மகன்கள் இருந்தும், தன்னை கவனிக்க ஆள் இல்லாத காரணத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தேன்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் எனக்கு நீதிமன்றம் மாதம் மாதம் இரண்டு மகன்களும் தலா 1000 ரூபாய் வழங்குமாறு அறிவுறுத்திய நிலையில் எனது இளைய மகன் தியாகராஜன் முறையாக பணம் செலுத்தி வருகிறார். ஆனால், மூத்த மகன் மூர்த்தி என்பவர் பணம் செலுத்த மறுத்து வருகிறார். அதனை மறுபடியும் நீதிமன்றத்தில் கேட்ட பொழுது எனக்கு பணம் செலுத்தியது போல ரசீது தயார் செய்து கொண்டு வந்து காண்பிக்கிறார்.

ஆனால், எனக்கு வங்கிக் கணக்கில் எந்த பணமும் வரவில்லை. இதனை ஊரில் உள்ள முக்கியஸ்தர்களிடம் தெரிவித்து கேட்டால் வீட்டில் உள்ள என்னையும் மற்றும் எனது பேரனாகிய சக்தி குமார் என்பவரையும் அடிக்க வருவதாகவும், இதனை மீறி வேறு எங்கு சென்றாலும் உன்னை கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் வைத்திருந்த இடத்தை மூத்த மகனுக்கு எழுதிக் கொடுத்திருந்தேன். அந்த இடத்தை மீட்டுத்தருமாறு மூதாட்டி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!