Skip to content

இலங்கையில் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை..

இலங்கை கிரிக்கெட் அணியின் 19 வயதுக்கு உட்பட்ட அணி கேப்டனாக இருந்த  தம்மிகா நிரோஷனா (41)மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 2000 முதல் 2002 வரை இலங்கையில் 19 வயதுக்கு உட்பட்டவருக்கான அணியின் கேப்டனாக இருந்தவர் தம்மிகா நிரோஷனா. தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காத இவர் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்றார். நேற்று இரவு, இலங்கையின் அம்பலாங்கொடாவில் உள்ள அவரது வீடு முன்பு மர்ம நபர் ஒருவரால் நிரோஷனா சுட்டுக் கொல்லப்பட்டார். கும்பல் மோதல் காரணமாக இக்கொலை நடந்து இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!