Skip to content
Home » கிரிக்கெட் வீரர் கோலிக்கு சொந்தமான ‘பப்’ மீது வழக்கு..

கிரிக்கெட் வீரர் கோலிக்கு சொந்தமான ‘பப்’ மீது வழக்கு..

  • by Senthil

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி 2008ல் துவங்கப்பட்டதிலிருந்து, பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை ஒட்டியுள்ள, கஸ்துாரிபா சாலையில் விராட் கோலிக்கு சொந்தமான, ‘ஒன்8 கம்யூன்’ என்ற பெயரில் பப் உள்ளது. பெங்களூரில் நள்ளிரவு தாண்டி 1:00 மணிக்கு மேல் பப் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் இரவு, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள சில பப்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட, கூடுதல் நேரம் திறக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுவதாகவும், கப்பன் பார்க் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து போலீசார் ரோந்து சென்றனர். விராட் கோலிக்கு சொந்தமான பப் உட்பட நான்கு பப்கள் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் திறந்திருந்தது தெரிந்தது. சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!