Skip to content
Home » குட்கா வழக்கு சிபிஐ கோர்ட்டில் இருந்து சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்

குட்கா வழக்கு சிபிஐ கோர்ட்டில் இருந்து சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் டில்லி சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு சிபிஐ நீதிபதி  எழில் வளவன்  முன்பு இன்று (ஜூலை 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முன்னாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் வழக்கு விசாரணையை சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி  உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!