Skip to content
Home » வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில்  11-ம் வகுப்பு மாணவன் ஒருவன் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்கு வந்துள்ளான். இதைப்பார்த்த வகுப்பாசிரியர் அவனை கண்டித்து  வகுப்பில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினார்.

ஆனால் மாணவன் அங்கேயே நின்றுள்ளான். இதனால் கோபமடைந்த ஆசிரியர் சத்தமாக அவனை வகுப்பை விட்டு வெளியேறுமாறு கூறினார். இதனால் கோபமடைந்த அந்த மாணவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக குத்தினான்.

இதில் படுகாயமடைந்த ஆசிரியர் வகுப்பறையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப்பார்த்து பிற மாணவர்கள் அலறினர். பின்னர் அந்த ஆசிரியரை சக ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மாணவனை கைது செய்தனர். ஆசிரியரை மாணவன் குத்திகொன்ற சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!