Skip to content
Home » ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது..

ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது..

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை பிற்பகல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட உள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  முன்னதாக ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  மேலும் உடல் எம்பாமிங் செய்யப்பட்டடுள்ளது. அதன் பின்னர் இன்று மாலை முதல் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பந்தர் கார்டன் பள்ளியில் வைக்கப்டவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!