Skip to content

விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு….. முக்கிய ஆவணங்கள் சிக்கின

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 3 இடங்களில்  சிபிசிஐடி போலீசார் இன்று காலை 8 மணிக்கு அதிரடி சோதனை நடத்தினர்.மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் யுவராஜ், தோட்டக்குறிச்சியில் உள்ள பேரூர்  அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ், கவுண்டன் புதூர்  ஈஸ்வரமூர்த்தி ஆகிய 3 பேர் வீடுகளில் சோதனை நடந்தது.

திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் 2 மணி நேரத்திற்கு  மேலாக நடத்திய  சோதனை  10 மணி அளவில்  நிறைவு பெற்றது.  அதன் பின்னர் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அவர்கள் நடத்திய சோதனையில்  3 இடங்களிலும் முக்கிய ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!