Skip to content
Home » ஜார்கண்ட்……ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் ஆகிறார்

ஜார்கண்ட்……ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் ஆகிறார்

ஜார்கண்ட முதல்வராக இருந்த   ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு   நெருக்கடி கொடுத்து  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் ஜார்கண்ட் சம்பை சோரன்   முதல்வரானார். இந்த நிலையில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பை சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து ஜார்கண்ட் சட்டமன்ற கட்சித்தலைவராக  ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து  அவர் ஆட்சியமைக்க  உரிமை கோரியிருந்தார். ஜார்க்கண்டில் புதிய ஆட்சியை அமைக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்  ஹேமந்த் சோரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனவே அவர் இன்று  மாலை மீண்டும் முதல்வராக பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!