Skip to content
Home » தனது கடையில் பொருட்கள் வாங்காத வாடிக்கையாளர் கொலை… கடைக்காரர் வெறி

தனது கடையில் பொருட்கள் வாங்காத வாடிக்கையாளர் கொலை… கடைக்காரர் வெறி

தலைநகர் டில்லியின் சங்கூர்பூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை கடையில் விக்ரம் குமார் ( 30) என்பவர் தனது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்காரர் லோகேசுக்கும் வாடிக்கையாளர் விக்ரம் குமாருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், லோகேசின் கடையில் மளிகை பொருட்களை வாங்குவதை விக்ரம் நிறுத்திவிட்டார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் விக்ரமை மளிகை கடைக்காரர் லோகேஷ் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார். ஆத்திரம் அடங்காமல் கத்தரிக்கோலால் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் விக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விக்ரமின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மளிகை கடைக்காரர் லோகேஷ் மற்றும் அவரது மகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். தனது கடையில் பொருட்களை வாங்காததால் வாடிக்கையாளரை மளிகை கடைக்காரர் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!