Skip to content
Home » அசாமில் கடும் வெள்ளம்……6 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாமில் கடும் வெள்ளம்……6 லட்சம் மக்கள் பாதிப்பு

 பிரம்மபுத்திரா அதன் கிளை ஆறுகள் என 8 ஆறுகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் அசாம் மாநிலத்தில்  பலத்த மழை பெய்து வருகிறது.  மழை காரணமாக பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை ஆறுகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால்  19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

காம்ரூப், கோலாகட், மஞ்ஜுலி, லக்கிம்பூர், கரீம்கஞ்ச், சச்சார், தேமாஜி, மொரிகான், உதால்குரி, திப்ருகர், தீன்சுகியா, நாகாவோன், சிவ்சகர், தரங், நல்பாரி, சோனித்பூர், தமுல்பூர், பிஸ்வநாத், ஜோர்ஹத் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் லக்கிம்பூர் மாவட்டம் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. 6 லட்சம் மக்கள்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.்

மாநிலத்தில் பாயும் பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகள் அபாய கட்டத்தை கடந்து பாய்ந்து கொண்டு இருப்பதாக  முதல்வர் தெரிவித்தார். இந்தச் சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்கு அசாம் மாநிலத்தில் மழை பொழிவு தொடரும் என தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல்வரை  தொடர்பு கொண்டனர். சூழலை சமாளிக்க தேவையான உதவிகளை வழங்குவதாக  அவர்கள் உறுதியளித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர். மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சூழலை கண்காணித்து வருகின்றனர்” என முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தில் பதிவான கனமழை தான் தற்போது மாநிலத்தில் வெள்ளம் ஏற்படக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மே 28-ம் தேதி முதல் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அசாம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!