Skip to content
Home » தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு.. தஞ்சையில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை..

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு.. தஞ்சையில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை..

ஹிஸ்புத் தஹிர் என்கிற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாக கருதப்படும் இடங்களில் இன்று அதிகாலை துவங்கி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ என்கிற தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூரில் குழந்தையம்மாள் நகரில் அகமது என்பவர் வீட்டில் இன்று காலை 6 மணியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பின் டிஎஸ்பி ராஜன் தலைமையில் நான்கு பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல்  தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும். சாலியமங்கலத்தில் அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!