சென்னை கோயம்பேட்டில் இன்று அனோவர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சென்னை ஐஏஎஸ் குடியிருப்பு பகுதியில் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். இவர் சென்னையில் பதுங்கி இருந்து தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்கத்தால் தேடப்படும் தீவிரவாதி என்பது தெரியவந்தது. அதன்பேரில் அவரிடம் நடத்திய விசாரணையில், அனோவர் மீது உபா சட்டம் உள்பட பல பயங்கரவாத தடுப்பு சட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் மேற்கு வங்க போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அன்சார் அல் இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்புடன் இவர் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஹபிபுல்லா என்ற தீவிரவாதியை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தான் அனோவர் பிடிபட்டுள்ளார்.