Skip to content
Home » மருமகளை கழுத்தை நெரித்துக்கொன்ற மாமியார்…

மருமகளை கழுத்தை நெரித்துக்கொன்ற மாமியார்…

தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பர்சானா. இவருடைய மருமகள் அஜ்மிரி பேகம் (28 ). இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மாமியார், மருமகளுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் பர்சானா டீ போட்டு தரும்படி மருமகளிடம் கூறியுள்ளார். இதற்கு பேகம் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே இருவருக்கும்  கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த பர்சானா தனது மருமகளை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஜ்மிரி பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பர்சானாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!