Skip to content
Home » காற்றுடன் பலத்த மழை……டில்லி விமான நிலைய கூரை சரிந்து 3 பேர் பலி

காற்றுடன் பலத்த மழை……டில்லி விமான நிலைய கூரை சரிந்து 3 பேர் பலி

தலைநகர் டில்லியில் கடந்த 2 மாதங்களாக கடுமையான கோடை வாட்டி வதைத்த்தது.  குடிநீருக்காக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் டில்லியில்  நேற்று  கனமழை   கொட்டியது.  நேற்று இரவும், இன்று அதிகாலையிலும் மழை தொடர்ந்து கொட்டியது. பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக டில்லி விமான நிலைய மேற்கூரை  இன்று அதிகாலை விழுந்து  3 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்துள்ளனர்.  நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் டில்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் நடந்துள்ளது. மழை காரணமாக விமான சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை  தீயணைப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கூரை சரிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீம் சரிந்து விழுந்து சேதமடைந்த காரில் இருந்து ஒருவரை மீட்டுள்ளனர். பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சம்பவத்தால் டெர்மினல் 1 பகுதியில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. செக்-இன் கவுண்டர்களும் மூடப்பட்டுள்ளன. இந்த இடையூறுக்கு  விமான நிலையம் வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை தனிப்பட்ட கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதனை அவர் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!