Skip to content
Home » திருட போன வாலிபருக்கு தம்பதியின் செக்ஸ் காட்சி….. வீடியோ எடுத்து மிரட்டல்

திருட போன வாலிபருக்கு தம்பதியின் செக்ஸ் காட்சி….. வீடியோ எடுத்து மிரட்டல்

சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டம் அஹிவாரா டவுண் பகுதியில் வசித்து வந்தவர் வினய்குமார் சாகு  (28). பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருந்தார். ஆனால் அவரால் ஒரு தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால் வினய்குமார் மனமுடைந்து விரக்தியில் காணப்பட்டார்.

எனவே அன்றாட செலவுகளுக்காக வழிப்பறி, செல்போன் திருட்டு போன்ற சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு செலவு செய்து வந்தார். திருட்டை  விரிவாக்கம் செய்த அவர் பின்னர் இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில், துர்க் மாவட்டத்தில் உள்ள தம்பதியின் வீட்டிற்கு சாகு திருட சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு பொருட்களை திருடாமல், தம்பதி உல்லாசமாக இருந்ததை மறைந்திருந்து பார்த்து, தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து கடந்த 17-ம் தேதி அந்த தம்பதியின் செல்போனுக்கு அவர்களின் அந்தரங்க வீடியோவை வினய்குமார் சாகு அனுப்பி, ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். பணத்தை தரவில்லை என்றால் வீடியோ இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதி உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் நந்தினி பகுதி போலீசார் மற்றும் குற்றவியல் மற்றும் சைபர் பிரிவு போலீசார் சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.அதனை தொடர்ந்து தம்பதிக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து  விசாரணை நடத்தி் வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!