Skip to content

புதுக்கோட்டை …. தேர் சாய்ந்து ஒருவர் பலி…..4பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது மாத்தூர். இந்த கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. கோயில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.  தேரில் கும்பம் ஏற்றும் பணி இன்று காலையில் நடந்தது. அப்போது  திடீரென  கயிறு அறுந்து, தேர் ஒருபக்கமாக சாய்ந்தது. இதில் தேரில் அடியில் பலர் சிக்கினர். அவர்களில்  மகாலிங்கம்(60) என்பவர் படுகாயமடைந்து இறந்தார். மற்றும் 4பேர்   தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!