Skip to content

மயிலாடுதுறை… லாரி மோதி பந்தல் அமைப்பாளர் பலி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் பந்தல் அமைப்பாளர் வைத்திலிங்கம். இவர் நேற்று காலை குத்தாலம் கடைவீதிக்கு வந்து தேநீர் அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது குத்தாலம் கடை வீதியில்  பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை அறிந்த வைத்திலிங்கம் சாலையின் ஓரம் ஒதுங்கி நின்ற நிலையில் பின்னால்  பூ ஏற்றி வந்த சரக்கு வாகன ஓட்டுநரும் பேருந்து வருவதை பார்த்து ஓரம் கட்டியுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து  வேகமாக வந்த  லாரி, மினி சரக்கு வாகனத்தின் மீது மோதி  வைத்திலிங்கம் மீதும்  மோதியது.  இதில் அவர்   தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த குத்தாலம் போலீசார் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் காயம் அடைந்த சரக்கு வாகன ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே சரக்கு வாகனத்தின் மீது மோதிய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் போலீசார்  அவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!