தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தஞ்சை காவல் சரகம் முழுவதிலும் இருந்து ஆங்காங்கே ஆதரவின்றி உடல் நலிவுற்று உயிர் இழந்து கிடந்த உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் நோக்கத்தோடு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.
அதேபோல, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதரவின்றி சிகிச்சை பெற்ற நோயாளிகள் இறந்த பின்னரும் அவர்களது உடலை உரிமை கோரி யாரும் வராத நிலையில், அந்த உடல்களும் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 26 உடல்களின் நல்லடக்கம் தஞ்சை ராஜகோரி மயானத்தில் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட காவல்துறை, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சை மாநகராட்சி ஒருங்கிணைத்து நேசக்கரம் என்கின்ற தன்னார்வ அறக்கட்டளை இந்த உடல் அடக்க பணியை செய்து முடித்தது.