Skip to content
Home » உ.பி. மணல் லாரி கவிழ்ந்து…. 8 பேர் பலி

உ.பி. மணல் லாரி கவிழ்ந்து…. 8 பேர் பலி

  • by Senthil

உ.பி. மாநிலம்  ஹர்தோய் பகுதியில் ஒரு மணல் லாரி தாறுமாறான வேகத்தில் சென்றது. ஒரு திருப்பத்தி்ல் அந்த லாரி ஒரு வீட்டின் முன் பகுதியில் கவிழ்ந்தது. இதில் வீட்டு முன் தூங்கி கொண்டிருந்த 8 பேர் மணல் லாரிக்கு அடியில் சிக்கினர். உடனடியாக புல்டோசர் கொண்டுவரப்பட்டு லாரி, மணலை அப்புறப்படுத்தினர். அதற்குள்ி 8 பேர் பலியாகி விட்டனர்.

அவ்தேஷ் (40), அவரது மனைவி சுதா (35) மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் லல்லா (5), சுனைனா (11) , புட்டு (4) மற்றும் அவர்களது உறவினர் கரண் (35),அவரது மனைவி ஹீரோ (30) மற்றும் இவர்களது மகள் கோமல் (5) என 8 பேர் பலியானார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 5 வயது சிறுமி காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்ததை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!