Skip to content
Home » 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…  தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!