Skip to content
Home » சேலம் அருகே…….முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தியானம்

சேலம் அருகே…….முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தியானம்

சேலம் மாவட்டம்  வாழப்பாடி அடுத்த புத்திர கவுண்டம் பாளையத்தில் உள்ள  முத்துமலை முருகன் கோயிலில், உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முருகன் சிலையின் உச்சிக்கு சென்று, சங்கல்ப பூஜை செய்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.  பன்னீர் கலசத்தை கொண்டு வேலுக்கு அபிஷேகம் செய்தும், மலர் தூவியும் வழிபட்டார்.

பின்னர் சிலையின் வயிற்றுப் பகுதியில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து வழிபட்டார்.முருகன் சிலையின் திருவடியில் மலர் தூவி வணங்கினார். பின்னர், அவர் முருகன் வேலை தாங்கி, மூலவரை சுற்றி வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியதுடன் அன்னதானமும் வழங்கினார்.  அன்னதானத்தை எடப்பாடியே வழங்கி தொடங்கி வைத்தார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்  நாளை வெளியாக உள்ள நிலையில் அவர் வழிபாடு நிகழ்த்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!