Skip to content

விவேகானந்தர் பாறையில் நாளை துவங்கி இரவு பகலாக பிரதமர் மோடி தியானம்..

இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் 30ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நாளை மாலை பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ளார். 30ம் தேதி மாலை விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள மண்டபத்தில் தியானத்தை துவக்க உள்ளார்.  அதாவது 30ம் தேதி மாலை தியானத்தை தொடங்கும் பிரதமர் மோடி ஜூன் 1ம் தேதி மாலை நிறைவு செய்கிறார். இரவு பகலாக பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார். பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ள நிலையில் விவேகானந்தர் பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!