Skip to content

மயிலாடுதுறை… மின்கம்பம் சாய்ந்து, மின்சாரம் துண்டிப்பு

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லக்கூடிய பிரதான சாலையான காந்திஜி சாலை இரு வழி பாதையாக பிரிக்கப்பட்டு டிவைடர்களுக்கிடையே மின்கம்ப விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. புனித சவேரியார் ஆலயத்தின் எதிரே இருந்த மின் விளக்கு திடீரென சாய்ந்து சாலையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்சார வாரிய  அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் விடிய விடிய பணியை மேற்கொண்டு மின் இணைப்பை வழங்கினர்.இரவு நேரம் என்பதால் அப்பகுதிகளில் போக்குவரத்து குறைந்த காணப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் மின் கம்பங்கள்  முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் அதன் அடிப்பகுதி துருப்பிடித்து சாய்ந்து விழுந்தது தெரிய வந்தது. மின்கம்ப விளக்குகள், மின்கம்பங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!