Skip to content

பைக் சாகசம்… நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பலி….

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே குலைக்கநாத புரத்தில் கட்டையன் பெருமாள் சாமி கோயில் கொடை விழா நடந்து வருகிறது. இவ்விழாவிற்கு வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தி ருந்தனர். இந்நிலையில் கோயிலுக்கு வந்த வாலிபர்கள் சிலர்  பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்ட குலைக்கநாதபுரத்தைச் சேர்ந்த ஞானம் மகன் ஜீவா என்ற ஜீவரத்தினம் (22), செந்தூர்பாண்டி மகன் பிரதீப்குமார் (23) ஆகிய 2 பேரும் எதிர் பாராதவிதமாக மோதியதில் தலையில் அடிபட்டு  சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மேலும் இவர்களுடன் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனும் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பைக் சாகசத்தில் ஈடுபட்டு  2 பேரும் ஆறுமுகநேரியில் லோடு ஆட்டோவில் டிரை வர்களாக வேலை பார்த்து வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!