கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை தொடங்கியுள்ளது.இந்நலையில் கோவையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மாலை நான்கு மணி முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்,சிறிது நேரத்தில் நகரின் சில இடங்களில் மிதமான மழை பொழிய துவங்கியது.அதன் படி,கோவை பீளமேடு, மசக்காளி
பாளையம் போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பொழிந்தது..அதே போல,சிங்காநல்லூர் பகுதியில் மிதமான மழை,காந்திபுரம், 100 அடி ரோடு ,உக்கடம்,குணியமுத்தூர்,காந்திபுரம், டவுன்ஹால், உள்ளிட்ட மாநகர பகுதிகளில் திடீரென மழை பெய்தது.இதனால் மாநகரம் முழுவதும் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்…