Skip to content
Home » 20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..

20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. மேற்குவங்கம், பீகார், ஒடிசாவில் இன்றும், நாளையும் கடும் வெப்ப அலை வீசும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை ஆகிய 20 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரே நேரத்தில் வெப்ப அலை, மிதமான மழை பெய்யும் என இருவேறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!