விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே அந்திலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர் அதே பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் குறித்து டேங்க் ஆபரேட்டர் சண்முகம் என்பவரை மதுபோதையில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், அவரது உறவினர் தமயந்தி, மகன் பிரபு ஆகியோர் ஞானபிரகாசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த கலவரம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் அளித்த புகார்களின் பேரில், இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவம் காரணமாக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் பெரும் அச்சத்துடன் அலறியடித்து ஓடினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.