சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில் தினந்தோறும் வடமாநிலங்களுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் சென்று வருகின்றன. மேலும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் போலீசாஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில் முதல் தளத்தில் உள்ள ஒரு ரூமில் சுத்தம் செய்ய வந்த துப்புரவு பணியாளர் ஒருவர் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில பெண் ஒருவர் அமர்ந்தவாறு தூக்கிட்டு நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியானார்.
அவர் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் . இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே இருப்புபாதை போலீசார், அமர்ந்த நிலையில் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை மீட்டு ராஜீவ் காந்தி பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.