லோக்சபா தேர்தல் நாளை தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது ஓட்டுரிமையை தமிழகத்திற்கு மாற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்பவன் ஊடக மற்றும் தகவல் தொடர்பு ஆலோசகர் திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள தகவலில், நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மற்றும் ஆளுநரின் துணைவியார் லட்சுமி ரவி, ஆகியோர் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு சென்னை, வேளச்சேரி சாலையில் உள்ள அட்வண்ட் கிறிஸ்துவ நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டை மாற்றி சென்னையில் வாக்களிக்கிறார் கவர்னர்..
- by Authour