Skip to content
Home » திருச்சி புறநகரில் 950 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

திருச்சி புறநகரில் 950 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

  • by Senthil

விநாயகர் சதுர்த்தி விழா இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது.  இதை முன்னிட்டு  ,இன்று வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டது . இதற்காக  வீதிகள் தோறும் விநாயகர் சிலை விற்பனகை்கு  வகை வகையாக, பல வண்ணங்களில் குவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தேவையான அளவில் உடனுக்குடன் விநாயகர் சிலைகள் செய்தும் கொடுக்கப்படுகிறது. திருச்சி மாநகரின் முக்கிய வீதிகளில் விநாயகர் சிலைகள்  வைக்கப்பட்டு உள்ளன. இதுபோல மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது.

வீடுகள், வர்த்தக நிறுவனங்களில்  வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு  கொழுக்கட்டை, சுண்டல்  மற்றும் இனிப்பு வகைகள்  உள்ளிட்ட பலகாரங்கள் வைத்து  பூஜைகள் செய்யப்பட்டது. திருச்சி புறநகர் மாவட்ட பகுதிகளில் 950 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதை தொடர்ந்து இந்து அமைப்புகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.அப்போது அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் நிறுவவும், சரியான நேரத்தில் ஊர்வலத்தை நடத்தவும் அறிவுறுத்தினார்.மேலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியான முறையில் சிலைகளை நிறுவுவதற்கு  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக துவரங்குறிச்சி, புத்தாநத்தம், தொட்டியம் அருகே உள்ள கொளக்கொடி ஆகிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆகவே மேற்கண்ட 3 இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புறநகர் பகுதிகளில் நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கும் ஊர்வலம் வருகிற 20 ம் தேதி நடைபெற உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!