Skip to content

912 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியில், பாரத பிரதம மந்திரியின் ஆயுஸ்மான், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 5 தினங்களாக கிராம மருத்துவ உதவி குழு காப்பீட்டு திட்ட முகாமில், சக்கராப்பள்ளி ஜமாஅத் சபையின் உதவியுடன், கிராமமே முன்னின்று கிராமங்களில் தகுதி பெற்ற 912 நபர்களுக்கு, ஒரு குடும்பம் 5 லட்சம் ரூபாய் பயன்பெறும் வகையில், அரசின் மருத்துவ காப்பீடுகளை பதிவு செய்து, காப்பீடுகளுக்கு உண்டான அட்டைகளை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கியது. சக்கராப்பள்ளி ஜாமிஆ மஸ்ஜித் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், ஜமாஅத் சபைத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு உண்டான ஏற்பாடுகளை அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் பரிபாலன சபை ஜமாத்அத் சபையினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!