Skip to content

பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு…. தப்பிய மர்மநபர்கள்…. திருச்சியில் துணிகரம்..

திருச்சி, மலைக்கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆண்டனி ராஜ். இவரது மனைவி ஜீவா ஆண்டனி 46. இவர் நேற்று வடக்கு ஆண்டாள் வீதி வழியாக அங்குள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், ஜீவா ஆண்டனி அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்து கொண்டு அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து ஜீவா ஆண்டனி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!