Skip to content
Home » திருச்சி பள்ளி மாணவி வன்கொடுமை …… வாலிபர் போக்சோவில் கைது….

திருச்சி பள்ளி மாணவி வன்கொடுமை …… வாலிபர் போக்சோவில் கைது….

திருச்சியில் கடந்த (22.04.23)-ந்தேதி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர் அன்பிலார் நகரை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுமி விடுமுறையில் துவரங்குறிச்சி, புழுதிப்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது தாத்தா வீட்டிற்கு அருகில் வசிக்கும் 25 வயது மதிக்கதக்க நபர் அவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியின் வீட்டிற்கு வந்து, அச்சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை மேற்கொண்டதில், துவரங்குறிச்சி, புழுதிப்பட்டியில் வசிக்கும் பால்ராஜ் (25) என்பவர் தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து பால்ராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் பால்ராஜ் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபவர் என விசாரணையில் தெரியவந்ததால் அவரின் குற்றச்செயலை தடுக்கும் விதமாக கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து திருச்சி கமிஷனர் சத்தியபிரியா , பால்ராஜை போக்சோவில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்தநிலையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள பால்ராஜை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர  கமிஷனர்  சத்தியபிரியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!