சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியில் புகுந்து ரசிகர்களிடம் செல்போன்கள் திருடப்பட்டதாக ஜார்கண்ட் மாநிலத்தை ராஜ்குமார் நுனியா, விஷால் குமார், கோபிந்து குமார், ஆகாஷ் மற்றும் சிறுவர்கள் என மொத்தம் எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து ரயில் மூலமாக வேலூர் மாவட்டத்திற்கு வந்து பின்னர் அங்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் கடந்த 28ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் வாங்கி கொண்டு மைதானத்திற்குள் நுழைந்து, தன்னை மறந்து குதூகலம் செய்யக்கூடிய ரசிகர்களை குறி வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
36 செல்போன்களை பறித்துவிட்டு மீண்டும் ரயில் மூலமாக வேலூருக்கு சென்று அங்கிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தப்பிக்க முயன்ற போது அவர்களை வழிமறித்த போலீசார், கைது செய்தனர். 36 செல்போன்களை பறிமுதல் செய்து மேலும் எத்தனை போட்டிகளில் இது போன்று கைவரிசை காட்டியுள்ளனர் என திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.