Skip to content

6 கோடி லஞ்சம் கேட்ட தஞ்சை இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நிதி நிறுவனர்களான ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் கணேஷ் மற்றும் சாமிநாதன் இருவர் மீதான நிதி மோசடி புகார்களில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் கேட்டதாக தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி நிறுவனத்தை நடத்தி வரும் கணேஷ் மற்றும் சாமிநாதன் இருவரும், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என எழுந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தஞ்சை ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர் கண்ணன் இருவரும் இந்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க 6 கோடி லஞ்சம் கேட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்பணமாக 10 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதாகவும் வந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவும் லஞ்ச ஒழிப்புத்துறை பரிந்துரை செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!