தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள்3 கோடியே 04 லட்சம் பேர் , பெண் வாக்காளர்கள் 3 கோடியே15 லட்சம் பேர். மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர் . வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் 3,310 பேர் . 60 சதவீது வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.
சோழிங்க நல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக ரூ.6.66 லட்சம் வாக்காளர்கள் உள்னர். இதுவே தமிழகத்தின் பெரிய தொகுதி.குறைவான வாக்காளர்கள் உள்ள சிறிய தொகுதி துறைமுகம். இந்த தகவலை சத்யபிரதா சாகு தெரிவித்தார். இதுபோல அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.