Skip to content

நடிகர் கருணாகரன் வீட்டில் 59 சவரன் நகை திருட்டு.. பணிப் பெண் கைது…

  • by Authour

சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வருபவர் நடிகர் கருணாகரன் (45) இவரது மனைவி தென்றல் ராஜேந்திரன் (44). இவர்கள் வீட்டில் கடந்த மாதம் 2ம் தேதி முதல் 29ம் தேதி வரை 59.7 சவரன் நகை சிறிது சிறிதாக மாயமானது. வீட்டின் பணியாளர்களிடம் இதுகுறித்து விசாரித்த போது யாரிடமும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதனால், தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம் கருணாகரன் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்தனர். மேலும், வீட்டில் உள்ள அனைவரின் கை ரேகையும் பதிவு செய்து ஆய்வு செய்யப்பட்டது. கருணாகரன் வீட்டில் காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விஜயா என்ற விஜிலா மேரி (38) என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். போலீஸார் நடத்திய சோதனையில் அவரது கை ரேகை ஒத்துப்போனது.

இதனையடுத்து போலீஸார் தீவிரமாக விஜிலா மேரியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, சிறுகச் சிறுக நகைகளைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து, திருடப்பட்ட 59.7 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!