Skip to content
Home » கேட்பாரற்று கிடந்த 52ஆயிரம் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த அதிகாரி…

கேட்பாரற்று கிடந்த 52ஆயிரம் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த அதிகாரி…

அரியலூர் மாவட்ட துணைக் கருவூலம் கூடுதல் துணை கருவூல அதிகாரியாக சுரேஷ் கண்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை  செந்துறை அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே கீழே கிடந்த ஹேண்ட் பேக்கை பார்த்து எடுத்துள்ளார். அதில் 52 ஆயிரம் பணம், ஸ்மார்ட் போன் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் முதலியவை இருந்துள்ளன.

உடனடியாக அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் வந்து இதுகுறித்து விவரம் தெரிவித்து ஹேண்ட் பேக்கை ஒப்படைத்தார். இதனை அடுத்து ஹேண்ட் பேக்கையின் உரிமையாளர் குழுமூர் கிராமம் வடக்கு தெரு ராஜராஜன் என்பவரது மகன் மதியழகன்

அவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கா.பெரோஸ்கான் அப்துல்லா  முன்னிலையில்  சுரேஷ் கண்ணன் ஹேண்ட் பேக்கை அதன் உரிமையாளர் மதியழகனிடம் ஒப்படைத்தார்கள்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   சுரேஷ் கண்ணன்  நற்செயலை பாராட்டி சால்வை அணிவித்தார்கள். இந்நிகழ்வின் போது அரியலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. ஆனந்தன் அவர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!