Skip to content

நிலச்சரிவு……மேலும் 500 பேர் புதைந்திருக்கலாம்….. ராணுவ வீரர் தகவல்

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 3 இடங்களில் நிலவ்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 300 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரை தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே  மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கூறுகையில்  நிலச்சரிவு ஏற்பட்ட முண்டகை பகுதியில் மட்டும் 400 குடும்பங்கள் இருந்தது. அந்த சுவடே தெரியாமல் அழிந்து போனது. எனவே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புதையுண்டு இருக்கலாம். அங்கு மட்டும் இன்னும் 500 பேர் மண்ணில் புதையுண்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக   தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!