Skip to content
Home » திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

திருச்சி கல்லுக்குழி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(34). இவர் பேஸ்புக் வழியாக பழக்கம் ஏற்பட்ட முத்துமாரி(24) என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது காதல் மனைவியை வீட்டில் காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து கண்ட்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துமாரியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!