கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூ டியூபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து எங்கள் youtube ல் விளம்பரம் செய்தால் உங்கள் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளரும் என ஆசை வார்த்தை கூறியதால் கிருஷ்ணன் தன் மனைவியிடமிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் பெற்று விக்னேஷிடம் கொடுத்துள்ளார். ஆனால் விக்னேஷ் சொன்னபடி நடந்து கொள்ளாததால், விக்னேஷை தொடர்பு கொண்ட கிருஷ்ணன் தனது பணத்தை திரும்ப கேட்டபொழுது பணம் தர முடியாது என ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
விக்னேஷ் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்படி விக்னேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த youtube நிறுவனத்தின் உரிமையாளர் சவுக்கு சங்கர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த 9ம் தேதி சவுக்கு சங்கரை போலீசார் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர். 4 நாள் கஸ்டடி முடிந்ததால் இன்று சவுக்கு சங்கரை கரூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.