Skip to content
Home » முசிறி அருகே 30 அடி உள்ள அர்த்தநாதேஸ்வரர் உருவ சிலையுடன் வீதி உலா…

முசிறி அருகே 30 அடி உள்ள அர்த்தநாதேஸ்வரர் உருவ சிலையுடன் வீதி உலா…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் அமைந்துள்ள அருள்மிகு மதுரை காளியம்மன் பங்குனி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடந்து வரும் .அதில் பல்வேறு அமைப்புகள் மதுரை காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்துவது வழக்கம் . இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக மாநில தலைவர் எஸ்.எஸ். செல்வராஜ் தலைமையில் மிக மிக பிரம்மாண்டமான 30 அடி அர்த்தநாதேஸ்வரர் உருவ சிலை சிவ தாண்டவம் ஆடி தொட்டியம் பகுதியில் முக்கிய வீதி வழியாக திருவீதி

உலா வந்து மதுரகாளியம்மன் திருக்கோயிலை அடைந்தது இதில் பக்தர்கள் பெண்கள் பல்வேறு வகையான வண்ண மலர்களை தட்டில் எடுத்துச் சென்று அம்மனுக்கு பூச்செரிதல் விழாவை சிறப்பாக நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!